Monday 6th of May 2024 07:45:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்போவதில்லை! - பிரதமர் அறிவிப்பு!

கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்போவதில்லை! - பிரதமர் அறிவிப்பு!


கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் குற்றம்சாட்டுவதற்குரிய தேவை யாருக்கும் இல்லை என்று தெரிவித்த அவர் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே தொடர்ந்தும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் குறித்து துறை முக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்போவதாகத் தெரிவித்த பிரதமர், துறை முக ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடவேண்டிய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் உள்ள 95 வீதமானவர்கள் கிழக்கு முனையத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை என்றும் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த தம்மை மக்கள் தெரிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE